Tuesday 29 September 2020

Do find the difference between Sinusitis & Migraine!

 


Do find the difference between
Sinusitis & Migraine!

சைனஸ்அய்டிஸ் மற்றும் ஒற்றைத்தலைவலி ஆகியவற்றுக்கு இடையி லான வேறுபாட்டைக் கண்டறியவும்!

Sinusitis & Migraine:

These two pains are both characteristics of migraine and sinusitis, correspondingly. Because of overlapping symptoms, migraine headaches and sinusitis have been misdiagnosed, very often! There are key distinctions between the two!!

 

Sinusitis: Inflammation of one's sinuses membranes due to nasal problems as well as bacterial infection is what you call sinusitis or sinus. If one has sinusitis, he will experience pain around the face, especially on your cheeks, areas surrounding the eyes, as well as above the eyebrows. Symptoms that occur with sinusitis are colds, phlegm, and fever. He will emit a greenish-yellow nasal residue. This is clearly a symptom of sinusitis and not migraines.

Migraine: A person is visually disturbed and feels pain pulsating in a particular head portion; these are the symptoms of migraines and not sinusitis. It may be a periodical ailment. There may a symptom of nausea, vomiting, and excessive urination.

Useful health tips.

Avoid cold and frozen food normally.

Do not intake, juicy, and freeze food especially in winter and on rainy days. Increase pulses varieties, nuts, and meat.

Do not intake cold, juicy, and frozen food during new moon day & full moon day. On those days the moon will closer to the earth lead to rising the water level both on earth as well as the human body which is made up of the sounding clay collected from the earth enables to aggravate the ailment.

Do not stay straight to the windows of the AC.

Do not use air-cooler.

Do not stay directly below the running fan. Keep aside.

Do not enter directly into AC from direct sun rays. Stay a few minutes in a normal place.

Do not enter into direct sun rays area from AC. Stay a few minutes in a normal place.

Do not drink water or juice immediately returning from a hot place. Stay a few minutes in a normal place.

Do not drink water or juice below the direct sun rays.

Do not dry the wet hair, through electrical hair drier.

Do not keep the wet hair, for a long time.

Take appropriate effort to promote the immune system of the body which is like security to a palace as every human body is more valuable than it.

 

Saturday 5 September 2020

"இடைநம்பிக்கை –Interfaith"எனும் தவறான வார்த்தை ( a wrong terminology)

 

முந்தைய பதிவாக “உலகளாவிய சமூக ஒத்திசைவு” எனும் தலைப்பில் பார்த்தோம். அதில் விவரிக்கப்பட்ட நேர்மறை  யான விபரங்கள், உலகம் உயர்வு பெற்றிடவும் உலகம் உய்வு பெற்றிடவும் உலகம் உள்ளளவும் தேவை.

தற்போதைய பதிவாகிய” இடைநம்பிக்கைInterfaith எனும் தலைப்பில் விவ ரிக்கப்படுகின்ற விபரங்கள் “உலகளாவிய சமூக ஒத்திசைவு”க்கு முற்றிலும் எதிர் மறையானது.மேலும்.மானுட சமுதாயத்தைச் சீர்குலைத்திடக்கூடியது. எனவே  உலகம் உள்ளளவும் தலைஎடுக்கக்கூடாதது.

"இடைநம்பிக்கை –Interfaith" எனும் தவறான வார்த்தை( a wrong terminology) 

இந்த இடத்தில்  மிக முக்கியமான ஒன்றைப்பற்றிக்  குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டியுள்ளது.அது மனித உரிமைபற்றியது ஆகும். மனிதர்கள் அனைவ ரும் சமம். ஒவ்வொருவரும் எவருக்கும் இரண்டாமவராக இல்லை. .”எவ்ரி ஒன் இஸ் செகண்டு[2] டு நன்” என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அவர வரின் எண்ணங்களும் செயல்களும் உரிய முயற்சிகளும்தான் அவரவரின் மனித தரத்தை நிர்ணயிக்கக் கூடிய பாராமீட்டர் என்கிற அளவுகோல் ஆகும்! மனிதனின் தரத்தை நிர்ணயிக்கக் கூடிய அந்த நுட்பமான அளவு கோல் எந்த மனிதரின் வசமும் பொறுப்பாகக் கொடுக்கப் படவில்லை. மனி தர்களுள், யாரும் “குவாலிட்டி கண்ட்ரோல்” எனும் மனித தரம் நிர்ணயித்தி டும் தகுதி பெற்றவரும் கிடையாது. எனவே எந்த ஒரு மனிதராலும் பிற மனிதரின் தரத்தை நிர்ணயித்துவிட முடியவே முடியாது. மனித தரத்தை நிர்ணயித்திடும் சிறப்புத் தகுதியை விரும்புவோர்  வேண்டுமானால், அதிக பட்சமாக, ஒவ்வொருவரும் தமக்குத்தாமே சுய பரிசோதனை செய்து கொண்டே, அல்லன கழித்திடவும் நல்லன கூட்டிடவும் பாடுபடலாம். இது பெரிதும் வரவேற்கத் தக்கது! உலகின் உயர்வுக்கும் உய்வுக்கும் உரிய வழி களைக் "கடல்மடை"போல் திறந்துவிட்டுவிடும். நலவுகளெல்லாம் நானில மெங்கும் பல்கிப்பெருகி, சுபிட்சம் நானாபக்கமும் சூழ்ந்திடும். பண்புகளும் பஞ்சமே இல்லாமல் பரவிப் போய்விடும்.

நாமெல்லாம் செய்துவரக்கூடிய “குவாலிட்டி கண்ட்ரோல்” எனும் தர நிர்ண யப்பணியானது நம்முடைய உற்பத்திப் பொருள்களுக்கும் உபயோகப் பொருள்களுக்கும் மட்டுமே உரியது ஆகும். மானுடர்கள் இறைவனின் அற் புதமான படைப்பு. எனவே மனிதனின் தர நிர்ணயப்பணியை எப்படி இன் னொரு மனிதனிடம் கொடுப்பான் படைத்தவன்? தன் பிரதிநிதியாகிய மானு டனின் கண்ணியம் வெகுவாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அதிகாரத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டுள்ளான் படைத்தவன்.

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மனித உரிமைகள் உள்ளன. அத்தகு உரிமைகளுக்குள் வேறுயாரும் தலையிடக்கூடாது. அத்தகு உரிமைகளுக் குள் வேறுயாரும் தலையிடவும் முடியாது. இதையுணர்ந்து ஒவ்வொருவ ரும் இயல்பாக வாழப்பழகிக் கொள்ளவேண்டும். அதற்கான தொடர் முயற்சி மிகவும் இன்றி யமையாதது. அத்தகு பிரத்தியேகமான உரிமைகளுள் மிக்க உணர்வுபூர்வமானதும் முதன்மை யானதும் “இறையியல்” சார்புடையதுதான். இறையியலில், “இறைநம்பிக்கையும்”, “இறை நம்பிக்கையின்மையும்” இரு வெவ்வேறு திசைகளை நோக்கியுள்ளன. ஆனால் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.வாழ்க்கைப்பயணம் அப்படிப்பட்டதுதான். இது சாத்தியமா? என் கிற வினாவை எழுப்புகிறவர்களுக் கெல்லாம் ஒரேயொரு பதிலாக, “பகுத் தறிவு” வழங்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டால், அது மிகை யாகாது!

“இறைநம்பிக்கை” என்பது உறுதியான விசுவாசம்  ஆகும். குறிப்பாக தர்க்க ரீதியான ஆதாரம் ஏதுமில்லாமல் நம்பிக் கைகொள்ளும் பண்பே நிலைப்பட வேண்டும்.  இது மன சாட்சி மற்றும் மனித ஆன்மாவுடன் முற்றிலும் தொடர்புடையதாகும். இப்பரந்து விரிந்துள்ள உலகில் பல்வேறு வகையான “இறையியல் கொள்கை” உடையவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு யதார்த்தம்தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்துள்ள தனித்தனி “இறையியல் அடிப்படைத் தத்துவங்களை”ப் பின்பற்றும் முழு உரிமையும், பின்பற்றும் பொறுப்பும் உள்ளது. அனைத்து “இறையியல் அடிப்படைக் கொள்கை” களும் முன்னதாகவே நிர்ணயமாக்கப்பட்டவை ஆகும். “இறை யியல் அடிப்படைக் கொள்கைகள்” மாற்றவோ கலப்படம் செய்யவோ முடி யாதவை. அப்படி மாற்றினாலோ கலப்படம் செய்யப்பட்டாலோ அந்த இறை யியலின் தனித்துவம் இல்லாமற் போய்விடும். அவ்வாறு தனித்துவம் இல் லாமற் போய்விடும்போது அது ஒரு தனி இறையியலாக பரிணமிக்க முடி யாது. அத்தகு நிலைகுலைவுக்கு யார் காரணமோ, அவர்கள் மனித உரி மையை நிச்சயமாக மீறுகிறார்கள். மனித உரிமையை மீறுகின்ற இச்செய லை மானுட சமுதாயத்தால் அங்கீகரிக்க முடியாது. 

எந்த இறையியலும் பிற இறையியலுக்கு எதிரானதல்ல."இஸ்லாம்" என்பது படைத்தவனின் விருப்பங்களையும் படைத்தவனின் வார்த்தைகளையும் பொறுத்துள்ள ஒரு விசுவாசமாகும். இதில் மானுடனின் சுயமான விருப் பத்திற்கும் மானுடனின் சுயமான வெறுப்பிற்கும் கிஞ்சிற்றும் இடம் கிடை யாது. இது படைக்கப்பட்ட மனிதர்களுக்கு சுமார் 125000 தீர்க்கதரிசிகள் மூலம் படைத்தவனால் இறக்கிவைக்கப்பட்டது ஆகும். இந்த பூமியில் மனித குலத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையுள்ள  ஓர் உலகளாவிய உண்மை ஆகும்.."இஸ்லாம்" எப்போதும் "மனிதசமூக நல்லிணக்கம்" மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களுடனுமான "நல்லிணக்கம் harmony" ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இது நன்கு அறியப்பட்ட உண்மை.

ஆனால், அண்மைக்காலமாக  யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியாத குறுகிய உள்ளத்தையுடைய சிலர்  Interfaith-இன்டெர்பெஇத்-இடைநம் பிக்கை என்கிற ஒவ்வாத ஒரு தவறான சொல்லை [terminology] கெட்ட நோக்கத்தோடு புழக்கத்தில் நுழைத்து பல்வேறு மக்களின் இயல்பான  இறையியல் கொள்கையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிரார்கள்.அவர்கள் புழக்கத்தில் சேர்த்துள்ள “Interfaith-இன்டெர்பெஇத்-இடைநம்பிக்கை என்கிற சொல்லுக்கு "harmony நல்லிணக்கம் " என்கிற இன்னொரு சொல்லுக்குரிய பொருளை தவறாக முன்வைக்கிறார்கள். அது முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் "harmony நல்லிணக்கம்" என்கிற சொல் "மனிதசமூக நல்லிணக் கத்தை" சுட்டிக்காட்டுவதற்காக தொன்று தொட்டு புழங்கிவரும்  வார்த்தை ஆகும்.

மனித உரிமைகளின்படி, “இடைநம்பிக்கைInterfaith என்பது நல்லிணக்கத் திற்குஎதிரானது. இது மனித உரிமைகளை பாதிக்கிறது.எனவே  இடை நம்பிக்கைInterfaith என்பது மனித உரிமைகளுக்கே எதிரானது ஆகும்..[அல்குர்ஆன்-சூரா 109: 1-6]

இடை நம்பிக்கை Interfaith என்பது  இனிப்பு பூசப்பட்ட விஷம்ஆகும். தற் போது இவ்விஷம் உலகம் முழுவதும் தவறாக பரவுகிறது. மனிதத்தன்மை யிலிருந்து மாறுபடுபவர்களாலும் மனித உரிமையை மீறுகிறவர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. இச்செயல் மனிதர்களின் அனைத்துவித மான நற்செயல்களையும் அனைத்துவிதமான நலவுகளையும் மாற்றிவிடு வதோடு  மனிதர்களுக்குத் துன்பம்தரும் அனைத்துவிதமான கெடுதல்களை யும் நஷ்டங்களையும் மனிதர்களிடம் கொண்டுவந்து திணித்துவிடும்.

Global social harmony -உலகளாவிய சமூக ஒத்திசைவு!

 

Global social harmony

உலகளாவிய சமூக ஒத்திசைவு

மனிதஒளி என்று நாம் உணர்ந்தவை உண்மையில் இயற்கை யானவை. இதை அறிவியல் சமீபத்தில் வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது. மனித உடலின் அனைத்து பாகங்களும் ஒருமின் காந்த புலத்தை வெளியிடுகின்றன. உடலின் அனைத்து முக்கிய பாகங்களுள்ளும் தலைமை யான  உறுப்பான இதயம் மிகப்பெரிய மின்காந்த புலத்தை வெளியிடுகிறது. மேலும் இந்த உண்மையன உயிரியலைப் புரிந்து கொள்ளும்போது, நம்மால் பொதுவாக ஏற்கனவே அறியப்பட்டதைவிட,உயிரியல் மிகமுக்கியமான பாத்தி ரத்தை  வகிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. மேலும் எல்லா மனித உயிர்களுடனும் நாம் பகிர்ந்து கொள் ளும் போது அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று தொடர்புடைதா யிருக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடிகிறது. 

இதயம் மிகப் பெரிய மின்காந்த புலத்தை வெளியிடுகிறது. இதயம் வெளியிடு கிற இந்த புலங்களும் அவற்றில் குறியி டப்பட்ட தகவல்களும், நாம் எப்படி உணர்கிறோம்?, என்ன நினைக்கிறோம்? என்பதெல்லாம் நாம் மேற் கொள்ளும் வெவ்வேறு உணர்ச்சிகளின் அடிப் படையில் மாறலாம். குறுகியகால மற்றும் நீண்டகால நினைவாற்றல் கொண்ட நியூரான்களின் அமைப்பு மூலம் இதயம் மூளைக்குரிய சமிக்ஞைகளை அனுப்புகிறது.,மேலும் இந்த சமிக் ஞைகள் நமது உணர்ச்சி அனுபவங்களில், ஏற்றபடி குணம் செய் யும். மனிதனுள் இயற்கையாக அமையப்பெற்றுள்ள இந்த இயல் பான ஏற்பாடுதான் “உலகளாவிய சமூக ஒத்திசைவு” என் கிற "உன்னத நிலை" உருவாக வழிவகுக்கிறது.

இதய ஒத்திசைவு என்பது ஓர் இணக்கமான ஒழுங்கு, மற் றும் கட்டமைப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றது. அதன் உகந்த செயல் பாடு அதன் செயல்முறைகளில் எளிமை மற்றும் இயல்பான ஓட்டத்துடன் நேரடியாக தொடர்புடை யது. அடிப்படையாகவே அன்பு, அழகிய பண்புகள், இரக் கம், ஈகை, வெட்கவுணர்வு, நன்றி யுணர்வு, நலவுகளைப் பாராட்டுதல், பிறரின் தவறுகளைப் பொறுத் தல், தன்னு டைய தவறுகளின் மீதுவெட்கிடும் உணர்வு,  தன்னு டைய நல்ல செயல்களின்மீது மகிழ்தல், தன்னுடைய கெட்ட செயல்களின்மீது வெருப்படைதல் மற்றும் பிற நேர்மறைஉணர்வுகள் நம் நரம்பு மண்டலத்தில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்துகின்றன. அதோடு அவை நம்மைச் சுற்றியுள்ளவர் கள் மீதும் ஒரு வித நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின் றன. இது உலகெங்கி லும் பரவலாகும்போது இதுவே “உல களாவிய சமூக ஒத்திசைவு" என்னும் உயர்பதவியைப் பெற்றுவிடுகிறது..

ஏனென்றால் உயிர் மற்றும் உடல்  ஆகிய இரண்டையும் ஒன்றி ணைத்து, படைத்தவனால் சிறப்பம்சமாக மானுடப் படைப்பு ஆரம்பிக்கபடுகின்ற வரையிலுமே, அனைவரின் உயிர்களுமே “ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனியாகக் கொண்டிலங்கும் “உயிர்களின் உலகத் தில்” ஒன்றாகத்தானிருந்து வந்திருக்கின்றன. நாம் அனை வருமே ஆரம்ப பெற்றோர் "ஆதம்- ஹவ்வா" அலைஹி முஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்கள் தான். நம்மு டைய முன்னோர்கள் எல்லாம் “ஒன்றே குலம்: ஒரு வனே தேவன்” என்று ஓங்கி முழங்கியவர்கள்தான். வழிப்பயணத் தில் காட்சிகள் மாறிடுவது போல் வாழ்க்கைப்பயணத்தி லும் காட் சிகள் மாறியுள்ளன.

நம் சிந்தைக்குரிய விருந்தும் மருந்தும்:

உதாரணமாக இன்று அமெரிக்கக்கண்டத்தின் ஓர் ஊரி லோ, ஆப் பிரிக்கக்கக்கண்டத்தின் ஓர் ஊரிலோ அல்லது ஐரோப்பாக்கக் கண்டத்தின் ஓர் ஊரிலோ, நம் இந்தியத் துணைக் கண்டத்தின் வடகோடியைச் சார்ந்த ஓர் இந்திய ரும், நம் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியைச் சார்ந்த இன்னோர் இந்தியரும் தற் செயலாகச் சந்திக்க நேர்ந்தால் என்ன நிகழ்கிறது?

“நீங்கள் இந்தியாவா?ஆம்! நீங்களும் இந்தியாவா ?ஆம்! எந் த மாநிலம்? எந்த மாவட்டம்? எந்த ஊர்? உங்கவீடு கவர் மென்ட் ஸ்கூல் தெருவில், ஸ்கூலுக்கு எதிர் வரிசையிலா இருக்கு? எங்க தாய்மாமாவீடு கவர்மென்ட் ஸ்கூல் தெருவி லேயே உள்ள டீச்சர்ஸ் குவாட்டர்சில் தான் இன்னும் இருக் கிறது. எங்க தாய் மாமா அதே ஸ்கூலில் ஹிந்தி  டீச்சராக ஒர்க் பண்ணிக்கொண்டு அதேவீட்டில் தான் இன்னும் வசித் து வருகிறார். என்னசார் சொல் றீங்க? அந்த ஸ்கூலின் ஹிந்தி டீச்சராக இருப்பவர்தான் உங்க ளின் தாய்மாமாவா? இரண்டு மாதங்களுக்கு முன்புதான்  எங்கள் வீட்டில் நடை பெற்ற என் அண்ணன் மகனுடைய மேரேஜ் விருந்தில் எங்க ஹிந்தி டீச்சர், அதாவது உங்க தாய்மாமா கலந்துகொண்டி ருந்த போது நான்தான்சார் அவர் கூட இருந்து அவ ருக்குப் பணிவிடைசெய்து கவனித்துக் கொண்டேன். அப்படீன்னா .. சார், நீங்களும் நானும் ரெம்பாவாய் நெருங்கிட்டோம் சார். என்ன குறைத்துச் சொல்றீங்க? ரெம்ப ரெம்பாவாய் நெருங் கிட் டோம் என்று சொல்லுங்க சார்!  வருடா வருடம் எங்க தாய் மாமா வெக்கேஷனில் ராஜஸ்தானுக்கு வருவதுதான் வழக்கம். த்ரீ இயர்ஸுக்கு முன்பு .மாமாவின் நெருங்கிய ஆசிரிய நண்பருடைய பேமிலியில் ஒரு முக்கிய கல்யாண மாம். அதனால் அந்த வெக்கேஷனில் எங்க குடும்பத்தை யெல்லாம் எங்க தாய் மாமா உங்க சென்னைக்கு வரவ ழைத்துக் கொண்டு விட்டாங்க. அப்போ நான் கோர்ஸ் முடித்து ஜாப் செர்ச்சில் இருந்தேன். என்னையும் கட்டாயப் படுத்திட்டாங்க. அங்க வைத்து செய்த ஆன் லைன் ஜாப் செர்ச்சில் தான் எனக்கு இந்தஜாப். உங்களுடைய லார்ஜ் மெரீனாவையும் மெட்ராஸ் யுனிவர்சிடியையும்  என்னால் மறக்கவே முடியாது சார். நீங்க இந்த சிட்டிக்கு வந்து  மூன்று மாதம்தான் ஆகிறதா? நான் இந்த சிட்டிக்குவந்து த்ரீ இயர்ஸ். அப்படீன்னா இந்த ஏரியாவின் ஹோட்டல்கள் முழு தும் உங்க ளுக்குத் தெரிந்திருக்காதே? இப்போ ஒன்னு செய் வோம். இந்த பார்க் ரோட்டின் லாஸ்டில் உங்க பக்கத்து ஸ்டேட் கேரளா காரரின் சூப்பர் மெஸ் இருக்கிறது. இப்ப லஞ்ச் டைம் வேற நெருங்கிடிச்சு. டுடே சண்டே. இன்னும் கொஞ்சம் டைம்தள்ளிப்  போனால் கூட்டம்தான். இப்ப சவுத் இன்டியா மீல்ஸ் கிடைக்கும். காலையிலும்  மாலையிலும் சவுத் இன்டியா டிபன் கிடைக்கும். இன்று லஞ்ச்சுக்கு நீங் கள் என்னுடைய கஸ்ட், ஓகே?

சாரி சார். என்னுடைய ரூமில் எனக்காக என் சைனாகார ரூம் மேட்டும் என் மலேஷியாகார ரூம்மேட்டும் வெயிட் பண்ணிக் கொண்டுள்ளார்கள். நான் இப்ப ஒரு டாக்சியில் அவர்களை பிக் செய்துகொண்டு அவர்களின் பிளான்படி லஞ்ச்சுக்கு போகணும். சாரி சார்.இன்னொருநாள் பார்க்க லாம் சார்.

என்னது? கிடைத்த நாளை விட்டுவிட்டு இன்னொரு நாளா? இது நம்ம நாட்டுப்பழக்கமில்லையே?சரி இப்ப என்ன? டாக்சி வேண் டாம். நான் சிங்கிள்தான். அதனால்  உங்களு டைய அனுமதி யுடன் இப்ப நாம் டூ பெர்சன்ஸ் என்காரில் இங்கிருந்து புறப்பட்டு உங்களுடைய ரூம் நண்பர்களையும் உங்களுடைய ரூமிலேயே பிக் செய்து கொண்டு, நாம் நான் குபேராக ஒன்றாக பிளான் பண்ணி லஞ்ச் செய்வோம். நம் இந்தியாவுக்குத்தான் வோட் மெஜாரிடியுள்ளது. யு நீட் நாட் ஒர்ரி.நானும் அப்படியே உங்களு டைய ரூமுக்கும் வந்துபோ ரதுக்கு வழிதிறக்கும். எனக்கு மேலும் புதிய நண்பர்கள், வாங்க வாங்க,நான்கு பேருமே ஆசியாதான். உங்க பக்கத்து ரூமில் இருக்கும் ஓர் ஆஸ்திரேலியாகாரரையும் நம்முடன் சேர்த்துகொண்டு ஐந்து பேராக இன்று லஞ்ச் செய் வோம். இன்று நான்தான் ஹோஸ்ட், வித் யுவர் கைண்ட் அப்ரூ வல் ...தேங்க்யு சோ மச்! ஐ அம் வெரி ஹேப்பி பிரதர்.

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ,நெஞ்சு நிறைந்து விடும்! கண்கள் நனைந்துவிடும்.

விருந்தும் கிடைத்துவிடுகிறது. அதுவேதான் மருந்தும் ஆகிவிடு கிறது.

இதுதான் உலகளாவிய சமூக ஒத்திசைவு!“

“ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனி யாகக் கொண்டிலங்கும்“உயிர்களுடைய உலகத்தின்" இயல்பான வெளிப் பாடுகள்தான் இவை!. இயல்பு இயல்பு தான்! இயல்பைவிட்டு மாற்றுவதற்குத்தான் பல்வேறு செயற்கை அமைப்புகளும்,செயற்கையான  ஊடுருவல் களும்! அப்பப்பா!

விருந்தும் மருந்தும் உங்களுக்கு நிரம்பப் பிடித்திருக்கும் தானே?.. பின்னே என்ன?.. என்ன யோசனை?.. ஏன்தாமதம்? நாமெல்லோருமே ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளலாமே!

“ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனி யாகக் கொண்டிலங்கும் “உயிர்களுடைய உலகத்தின் உறுப்பினர்களுக்குள் இத்தகு இணைப்பா? அப்போ ஏன், மிகச் சிறிய உலகமாகிய ஒரேதாயின் வயிற்றுக்குள்ளே இருந் தவர்களின் வழக்குகள் நீதி மன்றங்களில் குவிந்துள் ளன?

ஓ அதைச்சொல்ல வருகிறீர்களா?அது உறுதிமிக்க தடிம னான பாறைக்குள்ளே செருகப்பட்ட பொடீ...வெடித்திரி யாக்கும்:பொன்னாசை,மண்ணாசை,பொருளாசை,பெயராசை,பேராசை போன்ற பொடிப்பொடி நூல்களெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டும், ஒன்றுசேர்ந்த அவை ஒன்றை யொன்று முறுக்கிக்கொண் டும்  பொடீ...வெடித்திரியாக வடிவம் பெற்றுவிட்டது! இப்போதும் ஒன்றுமில்லை. நாமெல் லாம் ஒன்று சேர்ந்து அந்த பொடீ... வெடித்திரியின் வெளி நுனியில் பற்றவைக்கப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நம்முடைய பலமும் சேர்ந்து ஒட்டுமொத் தமாக நம் அனைவரின் பலமும் பெருகிவிடும்! 

குறிப்பு:மனிதனிடத்தில், அவனையறியாமலோ அல்லது   கெட்டவர் களின் சகவாசத்தாலோ அல்லது மனித சமுதா யத்தின் பகிரங்கமான எதிரிகளாகிய சாத்தான்களின் தீய தூண்டுதலாலோ, ஒரு தவறு ஏற்பட்டுவிட்டால், பிரகாச மாயிருக்கும் அவனுடைய இருதயத்தில் ஒரு கரும் புள்ளி ஏற்பட்டுவிடுகிறது. அவன் அந்த தவறையுணர்ந்து அத்த வற்றுக் குப் பகரமாக ஒரு நன்மையைச் செய்து அத்தவறுக்கான பிராயச்சித்தத் தைத் தேடிக்கொள்ளும்போது அத்தவற் றின் காரணமாக அவனுடைய இருதயத்தில் ஏற் ட்டுவிட்ட அந்த கரும்புள்ளி மறைந்து அவனுடைய இதயம் மீண்டும் பிரகாசமாகிவிடுகிறது. மாறாக அவன் தொடராக எதிர்மறை யாகவே செயல்படத் தலைப்பட்டால் அவனுடைய இருத யத்தில் தொடராக கரும்புள்ளிகள் ஏற்பட்டு அந்த இருதயம் கருமை யடைந்து விடும். அவ்வாறு கருமை யடைந்துவிடு கின்ற இருதயத்தில் நேர்மறையான எண்ணங்கள் உதயமாகாது. நேர்மறையான எண்ணங் கள்  உதயமாகாத நிலை ஏற்பட்டுவிட்டால் அவனுடைய அங்க அவய வங்களில் மூலமாக  நேர்மறை யான செயல்களும் உருவாகுவதற்கு வாய்ப்பில்லாத நிலை உண்டாகிவிடும். படைத்தவன் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!!

 

 

Wednesday 2 September 2020

தீனுல் இஸ்லாம் இலகுவானது! சொர்க்கம் செல்லஇலகுவான வழி.!!

 

தீனுல் இஸ்லாம் இலகுவானது! சொர்க்கம் செல்லஇலகுவான வழி.!!

இரத்தினக் குவியல்களின் சுருக்கம்:

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி  முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர் களின் மேற்காணும் திருமொழிக்கருத்தை சற்றுற்று நோக்கு வோமாக:

1 அல்லாஹுதஆலா சொல்வது:

ஸூரா 103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல் லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

காலத்தின் மீது சத்தியமாக;நிச்சயமாக:மனிதன் நஷ்டத்தில் இருக் கின்றான்;ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலி ஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொ ருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமை யைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

2. அண்ணல் நபி முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல் லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வது:

1.“எண்ணங்களைப் பொறுத்தே எல்லா செயல்களும் அமைகின் றன.

2.ஒரு மனிதன் அவசியமற்றதைக் கைவிடுவது இஸ்லாத் தின் அழகிய பண்புகளில் அடங்கும்.

3. தமக்கு விரும்புவதையே தம் சகோதரர்க்கும் விரும்பாத வரை உங்களில் ஒருவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளராய் ஆக மாட்டார்.

4. ஹலாலும் தெளிவானது; ஹராமும் தெளிவானது; இவற்றுக் கிடையில் சில சந்தேகத்திற்குரியவையும் இருக் கின்றன. சந்தே கத்திற்கிடமானவற்றைக் கைவிட்டால் தம் மார்க்கத்தைக் காத் துக்கொண்டார்”.

3. இமாம் அபூ தாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்காணும் 4 ஹதீஸ்களைப் பற்றிப் பின் வரும் விஷயத் தைக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“நான் ஐந்து லட்சம் நபிமொழிகளை எழுதிப் பதிவு செய்துள் ளேன், அவற்றிலிருந்து நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு (4590) நபிமொழிகளைத்தேர்வு செய்து ‘சுனன் அபூதாவூத்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். மேற்படி நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு (4590) நபிமொழி களிலிருந்து நான்கு நபிமொழிக ளைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நான்கின்படி ஒரு முஸ்லிம் வாழ்ந்தால் இஸ்லாத்தின்படி வாழ்ந்தவராக அவரைக்கருதலாம். சொர்க்கம் செல்ல அந்த நபிமொழிகளே போதுமானவையாகும்.

4 ஹழரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் அத்தெஹ்லவி ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள் மேற்காணும் நான்கு நபி மொழி களை இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர் கள் தேர்ந்தெடுத்ததற்கு, பின்வருமாறு விளக்கம் அளித் துள் ளார்கள்:

1. வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவ தற்கு, முதல் நபிமொழி போதுமானது.

2. மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த அருட்கொடையான வாழ்நாளை வீணாக்கிவிடாமல் இருப்பதற்கு, இரண்டாவது நபி மொழி போதுமானது.

3. அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற் று வதற்கு, மூன்றாவது நபிமொழி போதுமானது.

4. ஒரு விஷயம் அனுமத்திக்கப்பட்டதா, அனுமதிக்கப் படாததா என மார்க்கம் சொல்லியிராத நிலையில், இருவித மான கருத்து ஏற்படும்போது ஐயத்திற்கு உரியதிலிருந்து விலகியிருக்க வேண் டும். இதுவே உயர்ந்த முறையாகும். இதைத்தான் நான்காவது நபிமொழி சுட்டுகிறது.

# நாம்,மேற்காணும் இரத்தினக் குவியல்களின் சுருக்கம் தொடர்பாக என்ன முயலவேண்டும்?

முயலும் வெல்லும்!ஆமையும் வெல்லும்!!முயலாமை...?